ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நண்பர்கள் தினம் இன்று ஆகஸ்ட் 6ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. உறவுகளை விடவும் நட்பைப் பெரிதும் மதிப்பவர்களாக இன்றைய தலைமுறையினர் இருக்கிறார்கள். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதும் அவர்கள்தான்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல் ரசிகர்களின் சண்டை கடுமையாக இருந்தது. பின் படிப்படியாகக் குறைந்து தற்போது ஓரளவிற்கே உள்ளது. அதே சமயம் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை கடந்த சில வருடங்களாக எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது. புதிதாக ரஜினி, விஜய் ரசிகர்களின் சண்டை கடந்த சில மாதங்களாக ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, “மகிழ்ச்சியான நண்பர்கள் தினம்... அன்பைப் பரப்புங்கள்,” என்று குறிப்பிட்டு, ரஜினி, கமல், எஸ்பிபி மற்றும் அவரது மகன் சரண், தனது அப்பா கங்கை அமரன் ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், விஜய், அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய வெங்கட் பிரபு, இப்போது விஜய்யின் 68வது படத்தை இயக்க உள்ளார்.