புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
''ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கான திரைக்கதை சிறப்பாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்,'' என்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், சிறுகதைகள் குறித்து ஆழ்ந்த இலக்கிய ரசனையுடன் பேசி, வாசகர்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசியதாவது:
கதை எழுதுவது கடினமான விஷயம். நான் 11 திரைக்கதைகள் எழுதி இருக்கிறேன். திரைக்கதையை பொறுத்தவரை 10 நிமிடங்களுக்குள் ஏதாவது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் ரசிப்பார்கள். இல்லை என்றால் படம் போரடிக்கிறது என்று எழுந்து போய்விடுவார்கள்.
சிறுகதை அப்படியில்லை, நாவல், நாடகங்களை விட கஷ்டமான வடிவம். நிறைய சிறுகதைகளை படித்தால்தான் சிறுகதை எழுத முடியும். அதேபோல் சினிமா எடுப்பதை விட குறும்படம் எடுப்பது கஷ்டம். ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கு திரைக்கதை நன்றாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்.
நாவல் படிக்க எனக்கு நேரமில்லை. அதனால் டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய சிறுகதையை படித்து கொண்டே இருப்பேன். சிறுகதை என் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. என் சிந்தனையை மாற்றுகிறது. கதை, கவிதை, ஓவியம் ஆகிய கலை வடிவங்கள் ஏன் படைக்கப்படுகின்றன என்றால், அது ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
பலர் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்தகத்தை கூட படிக்காமல் இறந்து விடுகின்றனர். அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். ஒரு நல்ல சிறுகதை மலர்களின் நறுமணத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு மரத்தை தொட்டுப்பார்த்து நன்றி சொல்ல வைக்கிறது. இலக்கிய வாசகனை சிறுகதைகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு அழைத்து செல்கிறது.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.