மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! |
''ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கான திரைக்கதை சிறப்பாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்,'' என்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், சிறுகதைகள் குறித்து ஆழ்ந்த இலக்கிய ரசனையுடன் பேசி, வாசகர்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசியதாவது:
கதை எழுதுவது கடினமான விஷயம். நான் 11 திரைக்கதைகள் எழுதி இருக்கிறேன். திரைக்கதையை பொறுத்தவரை 10 நிமிடங்களுக்குள் ஏதாவது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் ரசிப்பார்கள். இல்லை என்றால் படம் போரடிக்கிறது என்று எழுந்து போய்விடுவார்கள்.
சிறுகதை அப்படியில்லை, நாவல், நாடகங்களை விட கஷ்டமான வடிவம். நிறைய சிறுகதைகளை படித்தால்தான் சிறுகதை எழுத முடியும். அதேபோல் சினிமா எடுப்பதை விட குறும்படம் எடுப்பது கஷ்டம். ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கு திரைக்கதை நன்றாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்.
நாவல் படிக்க எனக்கு நேரமில்லை. அதனால் டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய சிறுகதையை படித்து கொண்டே இருப்பேன். சிறுகதை என் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. என் சிந்தனையை மாற்றுகிறது. கதை, கவிதை, ஓவியம் ஆகிய கலை வடிவங்கள் ஏன் படைக்கப்படுகின்றன என்றால், அது ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
பலர் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்தகத்தை கூட படிக்காமல் இறந்து விடுகின்றனர். அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். ஒரு நல்ல சிறுகதை மலர்களின் நறுமணத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு மரத்தை தொட்டுப்பார்த்து நன்றி சொல்ல வைக்கிறது. இலக்கிய வாசகனை சிறுகதைகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு அழைத்து செல்கிறது.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.