ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சலார் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் அம்மா - மகன் சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி இருப்பதாகவும், அம்மாவுக்காக எதையும் செய்யக்கூடிய மகனாக நடிக்கும் பிரபாஸ், தாய்க்கு கொடுத்த வாக்குறுதிக்கும், தனது நண்பனின் விசுவாசத்திற்கும் இடையில் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காதாம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ், பிரபாஸின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த சலார் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.