ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சலார் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் அம்மா - மகன் சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி இருப்பதாகவும், அம்மாவுக்காக எதையும் செய்யக்கூடிய மகனாக நடிக்கும் பிரபாஸ், தாய்க்கு கொடுத்த வாக்குறுதிக்கும், தனது நண்பனின் விசுவாசத்திற்கும் இடையில் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காதாம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ், பிரபாஸின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த சலார் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.