‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சலார் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் அம்மா - மகன் சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி இருப்பதாகவும், அம்மாவுக்காக எதையும் செய்யக்கூடிய மகனாக நடிக்கும் பிரபாஸ், தாய்க்கு கொடுத்த வாக்குறுதிக்கும், தனது நண்பனின் விசுவாசத்திற்கும் இடையில் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காதாம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ், பிரபாஸின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த சலார் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.




