நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழகத்தில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வருகிறவர்கள் பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவான ஆவண குறும்படம் ‛எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. யானைகுட்டிகளை இந்த தம்பதியர் எப்படி அன்பாக பராமரித்து வளர்த்தனர் என்று அந்த குறும்படத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற பின் இந்த தம்பதியர் இந்தியா முழுக்க பிரபலமாகினர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டி, கவுரவித்தனர். இப்போது நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவர்களை அழைத்து பாராட்டி உள்ளார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பொம்மன், பெல்லி தம்பதியரை அழைத்து, யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.