ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழகத்தில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வருகிறவர்கள் பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவான ஆவண குறும்படம் ‛எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. யானைகுட்டிகளை இந்த தம்பதியர் எப்படி அன்பாக பராமரித்து வளர்த்தனர் என்று அந்த குறும்படத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற பின் இந்த தம்பதியர் இந்தியா முழுக்க பிரபலமாகினர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டி, கவுரவித்தனர். இப்போது நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவர்களை அழைத்து பாராட்டி உள்ளார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பொம்மன், பெல்லி தம்பதியரை அழைத்து, யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.




