இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற பல படங்களை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், அடுத்ததாக அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கும் திரில்லர் படமான ‛கண்ணிவெடி' என்னும் படத்தை தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையம்சத்தில் உருவாகும் இப்படம், தொழில்நுட்பம், அது சார்ந்து சமூகத்தில் ஏற்படும் நன்மைகள், பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் உருவாகிறது. இப்படம் சென்னையில் பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ‛கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பாகவும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் சேரும் தரமான படமாகவும் இருக்கும். ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாக இருக்கும்' என்றார்.