விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கன்னட சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் ரிஷப் ஷெட்டி. 'காந்தாரா' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரிஷப்புக்கு தெரியாமலேயே அவரது மனைவி பிரகதி ரெட்டி அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். அதற்கு 'ரிஷப் பவுண்டேஷன்' என்று பெயரும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் ஷெட்டி கூறும்போது “சினிமா துறையில் நுழைந்து சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததுக்கு நன்றி. 'காந்தாரா' படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் அது உலக அளவில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்றார்.
இதுகுறித்து பிரகதி கூறும்போது “மற்றவர்களுக்கு உதவுவதற்காக எதாவது பங்களிப்பை செலுத்துங்கள் என பலரும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அதிகாரபூர்வமாக ஒரு அறக்கட்டடளையை நிறுவ வேண்டும் என நினைத்து இதை தொடங்கினேன், உதவி தேவைப்படும் தனி நபர்கள், குழந்தைகளுக்கு இதன் மூலம் உதவலாம் என முடிவு செய்தோம். வேறு எந்த பொருளை பரிசாக கொடுத்திருந்தாலும் ரிஷப் ஷெட்டி இந்த அளவுக்கு மகிழ்ந்திருக்க மாட்டார். இந்த அறக்கட்டளை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்”என்றார்.