துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கன்னட சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் ரிஷப் ஷெட்டி. 'காந்தாரா' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரிஷப்புக்கு தெரியாமலேயே அவரது மனைவி பிரகதி ரெட்டி அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். அதற்கு 'ரிஷப் பவுண்டேஷன்' என்று பெயரும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் ஷெட்டி கூறும்போது “சினிமா துறையில் நுழைந்து சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததுக்கு நன்றி. 'காந்தாரா' படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் அது உலக அளவில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்றார்.
இதுகுறித்து பிரகதி கூறும்போது “மற்றவர்களுக்கு உதவுவதற்காக எதாவது பங்களிப்பை செலுத்துங்கள் என பலரும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அதிகாரபூர்வமாக ஒரு அறக்கட்டடளையை நிறுவ வேண்டும் என நினைத்து இதை தொடங்கினேன், உதவி தேவைப்படும் தனி நபர்கள், குழந்தைகளுக்கு இதன் மூலம் உதவலாம் என முடிவு செய்தோம். வேறு எந்த பொருளை பரிசாக கொடுத்திருந்தாலும் ரிஷப் ஷெட்டி இந்த அளவுக்கு மகிழ்ந்திருக்க மாட்டார். இந்த அறக்கட்டளை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்”என்றார்.