14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
தியேட்டர்களில் தற்போது தனி தியேட்டர்களில் 100 முதல் 120 ரூபாயும், மால் தியேட்டர்களில் 150 முதல் 200 ரூபாய் வரையும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் வெளி விலையை காட்டிலும் பல மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது. குறிப்பாக மால் தியேட்டர்களில் பல மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது.
தற்போது தியேட்டரில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு ஏற்கெனவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதகிவித ஜிஎஸ்டி விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50வது கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளது.