பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன்ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று. தலைவா, நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கம் அதிசயம் இது என்று பதிவிட்டு அதை ஏ. ஆர். ரஹ்மானுக்கும் டேக் செய்துள்ளார். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பின்னணி பாட, யுகபாரதி எழுதியுள்ளார் . அதேபோல் இந்த படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.