கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி உள்ளது. மேலும் இப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன்ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று. தலைவா, நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கம் அதிசயம் இது என்று பதிவிட்டு அதை ஏ. ஆர். ரஹ்மானுக்கும் டேக் செய்துள்ளார். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பின்னணி பாட, யுகபாரதி எழுதியுள்ளார் . அதேபோல் இந்த படத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.