ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவும், பாண்டி கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோவும் ஜோடியாக நடித்து வந்தனர். நிஜ வாழ்விலும் ஜோடியாக கமிட்டாகிவிட்ட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரிலிருந்து அடுத்தடுத்து சந்தியாவும், ப்ரிட்டோ மனோவும் வெளியேறிவுள்ளனர்.
இதில் ப்ரிட்டோ மனோவுக்கு பதிலாக நடிகர் சுதர்சனம் கமிட்டான நிலையில், மலர் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி நேயர்களிடம் நிலவி வந்தது. தற்போது, மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவுக்கு பதிலாக நடிகை சிவன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவன்யா, 'செவ்வந்தி' தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். எனவே, அவரது எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.




