பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. பண்டிகை காலங்களில் 10 கோடி பம்பர் பரிசு அறிவித்து லாட்டரி சீட்டை அரசு விற்கிறது. கேரள மாநில எல்லைகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள மாநில லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்தவர்கள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் உருவாகி உள்ள படம்தான் பம்பர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்திற்கு 10 கோடி பரிசு விழுகிறது. அது யார் என்பதை தேடி ஒரு கூட்டம் அலைகிறது. விஷயம் கசிந்து உறவுக்கூட்டம் முற்றுகிறது. கேரள அரசு பணம் தமிழனுக்கு செல்வதா என்ற பிரச்சினை உருவாகிறது. இறுதியில் நடப்பது என்ன, என்பதுதான் பம்பர் படத்தின் கதை. இதனை காமெடி கலந்து இரு மாநில உணர்வுகளின் பிரச்சினையாக உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார்.
இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஒளிப்பதிவை வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். வெற்றி, ஷிவானி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஹரிஷ் பெரடி முக்கியமான கேரக்டரில் அதாவது லாட்டரி வியாபாரியாக நடித்துள்ளார். வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.