நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய நாவலை தழுவி உருவாகும் படம் 'விளாயத் புத்தா'. ஜெயன் நம்பியார் இயக்குகிறார். கேரளாவில் வாழ்ந்த டபுள் மோகனன் என்ற கடத்தல்காரன் கேரக்டரில் பிருத்விராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் நடைபெற்றது. படப்பிடிப்பில் சண்டைகாட்சியில் நடித்தபோது பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிருத்விராஜ் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: 'விளாயத் புத்தா' படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டது. பிரதான அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி தான். இந்த நேரத்தை என்னால் முடிந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முயற்சிப்பேன். இந்த வலியுடன் போராடி விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். அக்கறை காட்டி அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. என்று எழுதியுள்ளார்.