ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
பிரபல சின்னத்திரை நடிகர் அர்ணவ். தன்னுடன் நடித்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் திருவேற்காட்டில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஒருவர் மீது மற்றொருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக திவ்யா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்த அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அர்ணவ், தன்னுடன் சில வக்கீல்கள் மற்றும் பவுன்சர்கள் என அழைக்கப்படும் பாதுகாவலர்களை அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள திவ்யா வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை நடிகை திவ்யா வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வீடு தனது பெயரில் இருப்பதாகவும், தற்போது திவ்யா அத்துமீறி இதில் குடியிருந்து வருவதாகவும் அவர் காலி செய்ய வேண்டும் என அர்ணவ் கூறினார். இந்த வீட்டை வாங்க தனது நகையை கொடுத்ததாகவும், வீட்டிற்கான மாத தவணையை கட்டி வருவதால், இந்த வீடு எனக்கு சொந்தமானது என்று திவ்யா கூறியுள்ளார். இது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்குமாறு இருவருக்கும் போலீசார் உத்தரவிட்டனர்.