'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜிவி பிரகாஷ் இருக்கிறார். சிறுவயது முதலே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இவர்கள் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி காரணம் என பேச்சு எழுந்தது. இருவரும் பேச்சுலர், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இதுதொடர்பாக கிங்ஸ்டன் பட புரொமோஷனில் கூட திவ்ய பாரதியிடம் கேள்வி எழுந்தபோது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். இருப்பினும் தொடர்ச்சியாக இருவரையும் தொடர்புப்படுத்தி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றி திவ்யபாரதி இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்னையில் என் பெயரை இழுப்பது நியாயமில்லை. ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருபோதும் நடிகரையோ, திருமணமானவரையோ நான் டேட்டிங் செய்ய மாட்டேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அவை எல்லை மீறி செல்வதால் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நான் வலிமையான பெண், இதுபோன்ற வதந்திகள் என்னை சோர்வடைய செய்யாது. வதந்திகளை தவிர்த்து நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிப்போம். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதலும், கடைசியுமான விளக்கம்''
இவ்வாறு திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.