நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ரோஜா தொடரின் மூலம் பிரபலமான ப்ரியங்கா நல்காரிக்கு தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ரோஜா சீரியல் முடிந்தவுடன் அவர் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ப்ரியங்காவும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்திருந்தார். இதற்கிடையில், தனது நீண்ட நாள் காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்ட ப்ரியங்கா, திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன் கணவருக்காக சீதா ராமன் தொடரிலிருந்து விரைவில் வெளியேற இருப்பதாக திடீரென அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் 'கடைசி சீதா மேக்கப்' என்ற குறிப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சக நடிகரான ஜே டிசவுசாவும் 'சீதாவுடன் கடைசி காட்சி' என்று போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மனமுடைந்துள்ளனர். ப்ரியங்காவை மீண்டும் நடிக்க சொல்லி சோஷியல் மீடியா பதிவுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.