AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
தெலுங்குத் திரையுலகத்தின் மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்தில் அவரது தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'மிஸ்டர்' தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்த 2016ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுவாக பரவிய இவர்களது காதல், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. உத்தரப்பிரதேசம் அயோத்யாவைச் சேர்ந்த லாவண்யா மும்பையில் படித்து வளர்ந்தவர். 'அந்தாள ராட்சசி' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்குமா அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்ய காதல் ஜோடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி இத்தாலி நாட்டில் உள்ள ரிசார்ட் அல்லது ஹோட்டலில் திருமணத்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இடங்களைத் தேடி வருகிறார்களாம். திருமணத்திற்குப் பிறகு லாவண்யா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என வருண் குடும்பத்தினர் கண்டிப்புடன் கூறியதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கு லாவண்யா சம்மதித்த பிறகுதான் திருமண நிச்சயத்தையும் நடத்தினார்கள் என்கிறார்கள்.