பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி. 'கல்ப்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் தேவி 2 படத்தில் நடித்த அவர் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார். ஐதராபத்தில் வசித்து வரும் டிம்பிள் ஹயாதி அதே பகுதியில் குடியிருக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் முட்டல், மோதல் இருந்து வந்துள்ளது.
போலீஸ் அதிகாரியின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன், தனது காரால் மோதி சேதப்படுத்தியதாகவும் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க கோர்ட் மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.