மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் 'தேவி 2, வீரமே வாகை சூடும்' படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் அவரது ஆண் நண்பர் விக்டர் டேவிட் உடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறாராம். அவர்களது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ராகுல் ஹெக்டே என்பவருடன் கார் பார்க்கிங் விஷயமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் காவல் துறையில் டிராபிக் பிரிவில் உதவி கமிஷனராக பணி புரிபவர் ராகுல் ஹெக்டே. அவரது அலுவலக வாகனத்தை அவருக்குரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். பார்க்கிங் ஏரியாவிற்கு வரும் போதெல்லாம் போலீஸ் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை டிம்பிள் எடுக்கும் போது போலீஸ் வாகனத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், போலீஸ் வாகன டிரைவருடன் டிம்பிள் அடிக்கடி சண்டைக்குச் செல்வாராம். அதனால் டிரைவர் சேத்தன் குமார் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் டிம்பிள் மீது புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததற்காகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் டிம்பிள் அவரது வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, “அதிகாரத்தைப் பயன்படுத்துவது எந்தத் தவறையும் நிறுத்தாது,” என பதிவிட்டுள்ளார் டிம்பிள்.