இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி இந்தியா முழுவதிலும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இந்த படத்திற்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்தாலும் திரையிட தடை விதிக்கப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய லாபம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அதா ஷர்மா என்பவருக்கும் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை பெற்றுத் தந்துள்ளது.
இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் அதா ஷர்மா சோசியல் மீடியாவிலும் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கேரள ஸ்டோரி படம் வருவதற்கு முன் பலரும் எனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளும்படி அட்வைஸ் செய்து வந்தனர். ஆனால் கேரளா ஸ்டோரி படம் வெளியான பிறகு பலரும் எனது மூக்கு நன்றாக இருக்கின்றது என்று பாராட்டி வருகின்றனர். அதனால் எனக்கு இப்போது அப்படி அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவையும் இல்லை.. நேரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது முன்னாள் பாய் பிரண்டுகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “அவர்கள் யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். நான்தான் அவர்களை அழைப்பேன். அப்படி அவர்களை அழைத்து பேசுவதற்கு ஆல்கஹால் அருந்தி இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எனக்கு ஒரு ஸ்பூன் இருமல் டானிக்கே போதும் அவர்களை அழைப்பதற்கு” என்று கூறியுள்ளார்.