இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் செய்தி குறிப்பில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்று இடம் பெற்றிருப்பதை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னை பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.