தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஆனால் அமலாக்கத் துறையின் செய்தி குறிப்பில் உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் என்று இடம் பெற்றிருப்பதை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னை பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.