மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இன்று(மே 27) காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது என் மனதுக்கு இதமாக உள்ளது. அதோடு என் சகோதரி ரேவதி சுரேஷின் இயக்கும் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.