எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இன்று(மே 27) காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.
அதன் பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், ”நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது என் மனதுக்கு இதமாக உள்ளது. அதோடு என் சகோதரி ரேவதி சுரேஷின் இயக்கும் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
கோவிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.