நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
வாகை சூடவா, மெளன குரு படங்களின் மூலம் பிரபலமானவர் இனியா. தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இரண்டாவது நாயகி, சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'ரைட்டர்' படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்திருந்தார். 'ஆதார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'சீரன்'. இதில் இனியாவுடன் அருந்ததி, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேம்ஸ் கார்த்திக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். துரை.கே.முருகன் இயக்குகிறார்.
படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கும் ஜேம்ஸ் கார்த்திக் கூறியதாவது : செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. என் பெற்றோர் கலப்பு திருமணம் செய்ததால் எதிர்ப்புகளை சந்தித்தனர். ஊர்மக்களின் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். என் தாயார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்துப் படிக்க வைத்தார். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். சிங்கப்பூரில் தொழில் செய்கிறேன். என் பெற்றோர் மற்றும் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஊர் மக்கள் வெறுப்பை மறந்து எங்களை ஏற்றுக்கொண்டார்களா? என்பது கதை. என்றார்.