''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
கேரளாவைச் சேர்ந்த இனியா தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 'வாகை சூடவா' படத்தில் நடித்தன் மூலம் அதிகம் அறியப்பட்டார். அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். அடிப்படையில் நடன கலைஞரான இனியா தற்போது துபாயில் நடன பள்ளி தொடங்கி உள்ளார். ஏற்கெனவே கேரளாவில் 'அனோரா ஆர்ட் ஸ்டூடியோ' என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கினார். தற்போது 'ஆத்ரேயா ஆர்ட்ஸ் ஸ்டூடியோ' என்ற நடன பள்ளியை துபாயில் தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து இனியா கூறும்போது “நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது. பல்வகை நடனங்களை கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பிராண்டு அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், பருவகால நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆத்ரேயா முழுவீச்சில் செயல்படுகிறது” என்றார்.
இனியா தற்போது தெலுங்கில் உருவாகும் "ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் "கேங்ஸ் ஆப் சுகுமார குருப்" படத்திலும், தமிழில் "சீரன்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.