காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரை உலகில் நடந்துள்ள பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பான பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பிரபல மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா தேசிய விருது பெற்ற மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார். “2009ம் ஆண்டு 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடித்தபோது ரஞ்சித் தனி அறைக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'' என்றார்.
இதே போல மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் சித்திக் மீது ரேவதி சம்பத் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். 'சித்திக் என்னை ஓட்டல் அறைக்கு அழைத்து ஒருமணி நேரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்” என்றார்.
இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அது இன்னும் ஏற்கப்படவில்லை.