அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மலையாள திரை உலகில் நடந்துள்ள பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பான பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பிரபல மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா தேசிய விருது பெற்ற மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார். “2009ம் ஆண்டு 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடித்தபோது ரஞ்சித் தனி அறைக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'' என்றார்.
இதே போல மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் சித்திக் மீது ரேவதி சம்பத் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். 'சித்திக் என்னை ஓட்டல் அறைக்கு அழைத்து ஒருமணி நேரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்” என்றார்.
இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அது இன்னும் ஏற்கப்படவில்லை.