தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஷ்ருதன் ஜெய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவில் தேர்வில் இந்திய அளவில் 13வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோபிநாத் இஞ்செட்டி - ஜானகி தம்பதியின் மகள் மானஸ்வினிக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், உதயநிதி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். கலை உலகில் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.