சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஷ்ருதன் ஜெய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவில் தேர்வில் இந்திய அளவில் 13வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோபிநாத் இஞ்செட்டி - ஜானகி தம்பதியின் மகள் மானஸ்வினிக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், உதயநிதி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். கலை உலகில் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




