சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சினிமாவில் தோல்வி என்பது சகஜமான ஒன்று. தற்போதெல்லாம் ஆண்டுக்கு 250 படங்கள் வெளிவருகிறது. ஆனால் 25 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் சினிமாவின் முதல் தோல்வி படம் என்று 1939ம் ஆண்டு வெளிந்த 'பிரஹலாதா' என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள். தெலுங்கில் 1932ம் ஆண்டு வெளிவந்த 'பக்த பிரஹலாதா' படத்தை தழுவி இது உருவானது.
பி.என்.ராவ் இயக்கி இருந்தார். டி.ஆர்.முத்துராமலிங்கம், எம்.ஆர்.சாந்தலட்சுமி, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்ஜிஆர் இந்த படத்தில் இந்திராவாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சாமா சகோதரர்கள் இசை அமைத்திருந்தார்கள். ஷியாம் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் வெளிவந்த 6வது பேசும் படம் இது. அப்போது பரவலாக தமிழ்நாட்டில் பிரஹலாதா கதை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதற்கு ஈடாக இந்த படம் அமையாததே தோல்விக்கு காரணம் என்கிறார்கள். சேலம் சங்கர் பிலிமிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. முதலில் வெளியூர்களிலும், பின்னர் சென்னையிலும் வெளியான படம்.




