தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் - வெங்கட்பிரபு கூட்டணியின் 'விஜய் 68' படம் திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்றாகவே சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது. தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில்தான் விஜய் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென விஜய் - வெங்கட்பிரபு கூட்டணி பற்றிய தகவல் வெளியாகி அடுத்த சில நாட்களில் படம் பற்றிய அறிவிப்பும் வெளிவந்துவிட்டது.
இந்நிலையில் விஜய்யை சந்தித்தது பற்றிய பதிவொன்றை வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். அதில், “என்னை நம்பியதற்கு நன்றி விஜய்ணா. உங்களிடம் செய்த சத்தியத்தின்படி இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகே வெளியிடுகிறேன். புகைப்படம் 10 மாதங்களுக்கு முன்பு எடுத்தது. விஜய் 68, வெங்கட் பிரபு 12, ஆம், கனவு நனவானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'கஸ்டடி' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த வெங்கட்பிரபு படத்தில் விஜய் நடிக்க சம்மதித்தது பற்றி சிலர் விமர்சித்திருந்தார்கள். அப்படம் பாதி உருவாக்கத்தில் இருந்த போதே தான் விஜய் - வெங்கட்பிரபு சந்தித்துப் பேசி 'விஜய் 68' படம் பற்றி பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். 'மங்காத்தா, மாநாடு' போன்ற பெரும் வெற்றிப் படத்தை வெங்கட்பிரபு கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார். அந்த நம்பிக்கையைப் பற்றித்தான் தனது பதிவிலும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.