சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
சென்னை: எஸ்.பி.பி., சித்ரா ஆகியோரின் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ்-கோட்டி காலமானார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் டி.வி.ராஜ். இவரின் இயற்பெயர் தோட்டக்குரா சோமராஜூ. இவர் கோட்டி என்பவருடன் இணைந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார்.
ராஜ்-கோட்டி இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட 180 படங்களுக்கு இசையமைத்து உள்ளனர். இவர்களின் இசையில் எஸ்.பி.பி., மற்றும் சித்ரா சுமார் 2,500 பாடல்களை பாடி உள்ளனர். 1994 ம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளியான ஹாய் பிரதமர் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்கள் என்ற நந்தி விருதை ராஜ்-கோட்டி பெற்றனர். சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ராஜ்-கோட்டி இணை பிரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒன்றில் மீண்டும் இருவரும் இணைவதாக அறிவித்தனர்.
ராஜ்- கோட்டி இணையில் ஏ.ஆர்.ரகுமான் சாப்ட்வேர் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ராஜ் மற்றும் கோட்டியை தனது சகோதரர்கள் என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் திடீரென மரணம் அடைந்தார். ராஜ் மரணம்இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.