நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சென்னை: எஸ்.பி.பி., சித்ரா ஆகியோரின் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ்-கோட்டி காலமானார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் டி.வி.ராஜ். இவரின் இயற்பெயர் தோட்டக்குரா சோமராஜூ. இவர் கோட்டி என்பவருடன் இணைந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார்.
ராஜ்-கோட்டி இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட 180 படங்களுக்கு இசையமைத்து உள்ளனர். இவர்களின் இசையில் எஸ்.பி.பி., மற்றும் சித்ரா சுமார் 2,500 பாடல்களை பாடி உள்ளனர். 1994 ம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளியான ஹாய் பிரதமர் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்கள் என்ற நந்தி விருதை ராஜ்-கோட்டி பெற்றனர். சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ராஜ்-கோட்டி இணை பிரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒன்றில் மீண்டும் இருவரும் இணைவதாக அறிவித்தனர்.
ராஜ்- கோட்டி இணையில் ஏ.ஆர்.ரகுமான் சாப்ட்வேர் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ராஜ் மற்றும் கோட்டியை தனது சகோதரர்கள் என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் திடீரென மரணம் அடைந்தார். ராஜ் மரணம்இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.