தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் |
'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் அப்படி இல்லை என்றாலும் 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் மணிரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய நோட்டீசில், இந்த பாடலை தனது குடும்பத்தினர் 'அதன' ராகத்தில் உருவாக்கி இருந்தார்கள். 1978ம் ஆண்டு இந்த பாடலை ஹாலந்தில் நடந் இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். எங்கள் குடும்பத்தின் அனுமதி பெறாமல் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார். என்று குறிப்பிட்டுள்ளர்.
இதற்கு மணிரத்னம் சார்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், 'வீரா ராஜ வீரா' பாடல் 13-ம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவானது. மேலும், இப்பாடல் 'த்ருபத்' இசைப்பாணியில் இயற்றப்பட்டது. விளம்பர, லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வசிபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.