தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த ஜெயிலர் படத்தில் தனக்கான காட்சிகளை கிட்டத்தட்ட முடித்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்ததுள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்து மும்பையில் நடைபெற உள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த்.