அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ்த் திரையுலகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் த்ரிஷா, நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை தோழிகளுடன் ஷிர்டிக்குச் சென்று அங்கு கொண்டாடியுள்ளார். சாய்பாபா கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும், கேக் வெட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “உங்களது அளவுக்கதிகமான அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது இதயம் நன்றியுணர்வுடன் வெடிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ஆன்மீக ஈடுபாடு குறித்து அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத த்ரிஷா நேற்று தன்னுடைய பிறந்தநாளை ஷிர்டியில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சில நடிகைகள் பார்ட்டி வைத்து கொண்டாடும் பிறந்தநாளை பயபக்தியுடன் கொண்டாடியுள்ளார் த்ரிஷா .