சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் சீதா நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் ஆடி வெள்ளி. அந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், பாம்பு, யானை சீன்களும் தமிழகத்தில் பேசப்பட்டன. இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிக்கிறார் ராம நாராயணன் மகன் முரளி ராமசாமி. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அதில் 15 கோடி வரை சம்பளம் கேட்டதாலும், மூக்குத்திஅம்மன் 2 படத்தில் பிஸி ஆனதாலும் அவரை நடிக்க வைக்கவில்லை.
இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அம்மன் கதையில் நடிக்க வேண்டும் என அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். இயக்குனர் தேர்வும் நடந்து வருகிறது. திரிஷா ஓகே சொல்லும் பட்சத்தில் வரும் ஆடி வெள்ளியில் இந்த பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. மூக்குத்தி அம்மன் 2வில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அது நடக்கவில்லை. கடைசியில் அந்த படம் சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடிப்பில் தயாராகிறது. ஆகவே, இந்த பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது. நயன்தாரா மாதிரி தானும் பக்தி படத்தில் நடிக்கவே வேண்டும் என்று திரிஷா விரும்புகிறாராம். ஆடி வெள்ளி ரீமேக்கிலும் யானை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாம்.