ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
'தக்லைப்' விமர்சனங்கள், தன் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்கள் குறித்து திரிஷா இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக பதில் அளிக்கவில்லை. இன்னமும் திரிஷாவுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது. அதனால், பல சோஷியல் மீடியா விமர்சனங்கள் அவர் பார்வைக்கு போகவில்லை. மற்ற சில விமர்சனங்களை அவர் பார்வைக்கு போகவிடாமல் தடுத்துவிட்டார்களாம். அடுத்து சூர்யா ஜோடியாக 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது. திரிஷாக்கு தனி மேனேஜர், பிஆர்ஓ டீம், சோஷியல் மீடியா அட்வைஸர் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக பார்த்து வருபவர் அவர் அம்மா உமா கிருஷ்ணன்தான்.