கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛பொன்னியின் செல்வன் 2'. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, ரகுமான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டு பாகங்களுக்கும் நடிகர் கமல்ஹாசன் படத்தின் ஆரம்பத்தில் குரல் கொடுத்து இருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் கமலுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அவருடன் மணிரத்னம், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோரும் படம் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‛‛நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படியொரு ஆசையாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. இதை நான் ஒரு படமாக காவியமாக பார்க்கிறேன். படத்தை பற்றி நிறைய மாற்று கருத்துகள் இருந்தாலும் மக்கள் ஆதரிக்கிறார்கள். தமிழ் சினிமா, தமிழரின் பெருமையை போற்றும் இந்த படத்தை எடுக்கவே தனி துணிச்சல் வேண்டும். அதை செய்து முடித்திருக்கும் வீரன் மணிரத்னம். அவருக்கு துணையாக தோள் கொடுத்து, வாள் கொடுத்து நட்சத்திர பாட்டாள படை உதவி உள்ளது. இதுபோன்று நிறைய நட்சத்திரங்களை ஒன்றுகூடி பார்த்து நீண்டகாலமாகிவிட்டது. நல்ல பொற்காலம் துவங்கியதாக நினைக்கிறேன். போற்றப்பட வேண்டிய வெற்றி இது'' என்றார்.