லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம் வந்தவர் ரவீனா டாண்டன் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர். பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து விருதுகளை வென்றவர். தமிழில் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்த நிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், கேஜிஎப்-3 படத்தில் தான் நடிக்க இருப்பது குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், கேஜிஎப் 2 படத்தில் மறைந்த இந்திராவின் மாதிரியான இந்திய பிரதமராக நடித்திருந்தேன். அந்த படத்தின் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது என்று கூறியுள்ள ரவீனா டாண்டன், அடுத்து கேஜிஎப் படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடிப்பதற்காக செட்டுக்குள் செல்வதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்திலும் எனக்கு ஒரு அழுத்தமான கதா பாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.