பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 .இப்படம் இன்று (ஏப். 28) வெளியாகிறது. முதல் நாள் ஷோவை ரசிகர்களுடன் ஜெயம் ரவி காலை 9 மணிக்கு சென்னை குரோம்பேட்டை திரையரங்கிலும், கார்த்தி காலை 9 மணிக்கு சென்னை காசி தியேட்டரிலும் பார்த்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேப்போன்று விக்ரம், திரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தை சென்னையில் இன்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
சென்னை, வடபழனியில் உள்ள தியேட்டரில் பொதுமக்களுடன் சேர்ந்து, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், துலிபாலா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். காசி தியேட்டரில் படத்தை பார்வையிட சென்ற கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தியேட்டரில் உள்ள கண்ணாடி உடைந்து சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியது. உடைந்த கண்ணாடிக்கான செலவை கார்த்தி ஏற்றுக் கொண்டார்.