அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 .இப்படம் இன்று (ஏப். 28) வெளியாகிறது. முதல் நாள் ஷோவை ரசிகர்களுடன் ஜெயம் ரவி காலை 9 மணிக்கு சென்னை குரோம்பேட்டை திரையரங்கிலும், கார்த்தி காலை 9 மணிக்கு சென்னை காசி தியேட்டரிலும் பார்த்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேப்போன்று விக்ரம், திரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தை சென்னையில் இன்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
சென்னை, வடபழனியில் உள்ள தியேட்டரில் பொதுமக்களுடன் சேர்ந்து, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், துலிபாலா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். காசி தியேட்டரில் படத்தை பார்வையிட சென்ற கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தியேட்டரில் உள்ள கண்ணாடி உடைந்து சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியது. உடைந்த கண்ணாடிக்கான செலவை கார்த்தி ஏற்றுக் கொண்டார்.