மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை ஆரம்பித்து விட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள பொகாரா என்ற நகரத்தில் அஜித் குமார் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதோடு அங்குள்ள தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற காலதாமதம் ஆகும் என்கிறார்கள். தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி, அஜித் படத்திற்காக கதை திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.