எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து பொன்னின் செல்வன் படக்குழுவினர் சென்னையில் இருந்து துவங்கி ஐதராபாத், மும்பை, டில்லி என முக்கிய நகரங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு சமீபத்தில் கேரளாவிற்கும் வருகை தந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகர் டொவினோ தாமஸ் இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விக்ரமை சந்தித்து சில நிமிடங்கள் ஒரு ரசிகராகவே மாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.
விக்ரமுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள டொவினோ தாமஸ், அவருடனான சந்திப்பு குறித்து கூறும்போது, “விக்ரம் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரது அந்நியன் படத்தை பலமுறை பார்த்துள்ளேன். அதேபோல சினிமாவிற்கு வந்த பிறகு வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததிலும், ஏற்ற இறக்கங்களை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தபோதிலும், எப்போதுமே விக்ரம் என் மனதில் இருந்துள்ளார். ஒரு ரசிகனாக அவரை நேரில் சந்தித்து, சில நிமிடங்கள் அவர் அருகில் அமர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளார்.