மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் அதேகூட்டணி உடன் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஆந்திர செம்மர கடத்தல் அதிரடிப்படை முன்னாள் ஜ. ஜி. காந்தாராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛செம்மரம் கடத்தலை தடுக்க ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் எடுத்த முயற்சிகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். செம்மர கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு, போலீசாரை லஞ்சம் வாங்குவதாக காட்டியது வருத்தம் அளிக்கிறது. புஷ்பா 2 பாகத்தில் போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.