இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் அதேகூட்டணி உடன் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஆந்திர செம்மர கடத்தல் அதிரடிப்படை முன்னாள் ஜ. ஜி. காந்தாராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛செம்மரம் கடத்தலை தடுக்க ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் எடுத்த முயற்சிகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். செம்மர கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு, போலீசாரை லஞ்சம் வாங்குவதாக காட்டியது வருத்தம் அளிக்கிறது. புஷ்பா 2 பாகத்தில் போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.