பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பொதுவாகவே நமது தென்னிந்திய மொழிகளில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெரும் படங்கள் கூட வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாலிவுட் படம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த மாதம் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறிப்பிடும்போது பாலிவுட் படம் என்று குறிப்பிட்டது தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தி படங்களை பாலிவுட் என்று அழைப்பதை கைவிட வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக கலந்து கொண்டு வரும் இயக்குனர் மணிரத்னம், சென்னையில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கம் ஒன்றிலும் கலந்து கொண்டு பேசியபோது இந்த கருத்தை ஒரு தீர்வாக முன் வைத்தார்.
அவரிடம் தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் பாலிவுட் படங்களாகவே வெளியில் கருதப்படுகின்றனவே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம், “இந்தி திரையுலகம் தங்களை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டால் மக்களும் இந்திய சினிமாவை பாலிவுட் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார். இதே கருத்தரங்கில் பேசிய இயக்குனர் வெற்றிமாறனும், “எனக்கு பாலிவுட், கோலிவுட் என்கிற 'வுட்'டுகளில் நம்பிக்கை இல்லை. நாம் மொத்தமாக அனைத்தையுமே இந்திய சினிமா ஆக பார்க்க வேண்டும்” என்று கூறினார்.