இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

எனிமி, கேப்டன் படங்களில் நடித்த ஆர்யா, தற்போது முத்தையா இயக்கும் ‛காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தி இத்னானி நாயகியாக நடிக்கும் இந்த படம் ஜூலை 31ந்தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்டதால், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தை அடுத்து மனு ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதன் பிறகு சார்பட்டா பரம்பரை- 2 படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.