ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
யதார்த்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். தற்போது அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'வைப்பர்' என பெயரிட்டு அதற்கான டை்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர் மணிமாறன் நடராசன்.