கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
கிரைம் நாவல்கள் மூலம் கடந்த பல ஆண்டுகளாக புகழ் பெற்ற எழுத்தாளராக இருப்பவர் ராஜேஷ்குமார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகவும், டிவி தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.
சமீப காலங்களாக கதைத் திருட்டுகள் அதிகம் நடந்து, அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த 'அயோத்தி, விடுதலை' ஆகிய படங்களும் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன.
'விடுதலை' படத்தின் பல காட்சிகள், கதாபாத்திரங்கள் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர்தொட்டி' நாவலின் தாக்கத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து அந்நாவலை எழுதிய பாலமுருகன் அவரது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் பகுதியில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும், “என்னுடைய பல நாவல்களின் அஸ்திவாரங்களில் இது போன்ற விதி மீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பார்த்துக் கொண்டே நகர்ந்து விடவேண்டியதுதான். சட்டத்தை நாடினால் நட்டம் நமக்குத்தான்,” என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
எத்தனையெத்தனை படங்களில் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டு பதிவு செய்திருப்பார்.