புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
விடுதலை படத்திற்கு முன்பே சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க தயாரானார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விடுதலை-2 படம் திரைக்கு வந்து விட்டதால் அடுத்தபடியாக வாடிவாசல் பட வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, மூன்று பாகங்களாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை-2 படத்தைப் போலவே இந்த வாடிவாசலும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நீண்ட காலம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டது.
இதற்குள் எப்படிப்பட்ட அரசியல் எல்லாம் இருந்தது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் அவர் சொல்லப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்கிறார்கள்.