ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், "பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.