விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, சில பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி வில்லன் நடித்து வருகிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் வணங்கான் படக்குழு, அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வழக்கத்தை விட வேகமாக நடத்தி முடித்து படத்தை வெளியிடுவதற்கு இயக்குனர் பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.