பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! |
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, சில பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி வில்லன் நடித்து வருகிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் வணங்கான் படக்குழு, அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வழக்கத்தை விட வேகமாக நடத்தி முடித்து படத்தை வெளியிடுவதற்கு இயக்குனர் பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.