இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, சில பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி வில்லன் நடித்து வருகிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் வணங்கான் படக்குழு, அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வழக்கத்தை விட வேகமாக நடத்தி முடித்து படத்தை வெளியிடுவதற்கு இயக்குனர் பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.