பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதியும், நக்ஷத்திராவும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிதி நக்ஷத்திராவை பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்பினார். இதனையடுத்து மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றார். மற்றொருபுறம் நக்ஷத்திரா அவரது கணவர் விஸ்வாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு கர்ப்பகாலத்தில் நிகழும் வளைகாப்பு சடங்கு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தோழியை வாழ்த்தி நலங்கு வைத்துள்ளார். மேலும், விஸ்வாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.