மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ள '1947- ஆகஸ்ட்16' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தை, ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி ஆகியோருடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த, 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். அவர்கள் தயாரித்த 'மான்கராத்தே' படத்தில் நான் ஹீரோ. இன்று அவர்கள் தயாரிப்பில் உருவான, '1947 ஆகஸ்ட்16' படத்தில் நான் சிறப்பு விருந்தினர். விரைவில் புதிய அறிவிப்பை நீங்கள் கேட்பீர்கள்.
ஒருத்தர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எப்படியாவது என்கூட இருப்பவர் வளர்ந்து விட வேண்டும் என துடிப்பவர் வெகு சிலரே. வீரம் படத்தில் அஜித் சொல்வது போல் தான், கூட இருக்குறவங்கள நாம் பார்த்துக் கொண்டால், மேலே இருக்குறவன் நம்மை பார்த்துக் கொள்வார். நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்திக் சாரை பார்த்தேன். அழகான நடிகர். எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம். நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.