லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ள '1947- ஆகஸ்ட்16' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தை, ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி ஆகியோருடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த, 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். அவர்கள் தயாரித்த 'மான்கராத்தே' படத்தில் நான் ஹீரோ. இன்று அவர்கள் தயாரிப்பில் உருவான, '1947 ஆகஸ்ட்16' படத்தில் நான் சிறப்பு விருந்தினர். விரைவில் புதிய அறிவிப்பை நீங்கள் கேட்பீர்கள்.
ஒருத்தர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எப்படியாவது என்கூட இருப்பவர் வளர்ந்து விட வேண்டும் என துடிப்பவர் வெகு சிலரே. வீரம் படத்தில் அஜித் சொல்வது போல் தான், கூட இருக்குறவங்கள நாம் பார்த்துக் கொண்டால், மேலே இருக்குறவன் நம்மை பார்த்துக் கொள்வார். நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்திக் சாரை பார்த்தேன். அழகான நடிகர். எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம். நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.