மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி. அப்போது அவரை சூழ்ந்து ரசிகர்கள் பல பேர் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் ரஜினியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினி காரில் ஏறி அமர்ந்துவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் கேட்க, காரைவிட்டு இறங்கி வந்த ரஜினி உடன் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் குரூப்பாகவும், தனித்தனியாகவும் செல்பி எடுத்துக் கொண்டனர்.