என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி. அப்போது அவரை சூழ்ந்து ரசிகர்கள் பல பேர் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் ரஜினியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினி காரில் ஏறி அமர்ந்துவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் கேட்க, காரைவிட்டு இறங்கி வந்த ரஜினி உடன் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் குரூப்பாகவும், தனித்தனியாகவும் செல்பி எடுத்துக் கொண்டனர்.