'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி. அப்போது அவரை சூழ்ந்து ரசிகர்கள் பல பேர் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் ரஜினியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினி காரில் ஏறி அமர்ந்துவிட்டார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் கேட்க, காரைவிட்டு இறங்கி வந்த ரஜினி உடன் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் குரூப்பாகவும், தனித்தனியாகவும் செல்பி எடுத்துக் கொண்டனர்.