மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருந்தார். நேற்று தனது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்ததால் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் நேற்று லியோ படத்திற்கான காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதால் இன்று படக்குழுவினர்கள் அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.