இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜனவரியில் இருந்து காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இடையில் சில நாட்கள் மட்டும் சென்னை திரும்பி ஓய்வெடுத்த படக்குழுவினர், தற்போது மீண்டும் காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லியோ படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஹோட்டலில் தங்கி இருந்த லியோ படக்குழுவினர் அனைவரும் ஹோட்டலை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்தனர். அப்போது வெளியே வந்தவர்களில் லோகேஷ் கனகராஜ், நடிகை பிரியா ஆனந்த், கதாசிரியரும் இயக்குனருமான ரத்தினகுமார் மற்றும் தயாரிப்பாளர்கள் லலித்குமார், ஜெகதீசன் ஆகியோருடன் நடிகர் கதிரும் உடன் இருந்தார்.
இந்த படத்தில் இதுவரை நடிகர் கதிர் நடிப்பதாக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது படக்குழுவினருடன் அவர் தங்கி இருப்பது இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் விஜய்யுடன் கதிர் மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பிரபல யு-டியூப்பரான இர்பான் எடுத்த வீடியோ மூலமாக நடிகர் கதிர் இந்த படத்தில் நடிக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.